சென்னை:உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்க மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி, உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இலங்கை, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்குவதில்லை' என்று மனுதாரர் அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ் வாதிட்டார்.