மயிலாடுதுறை:மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட நரிக்குறவ சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்புக்கு உள்ளேயே தனியார் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கப்பட்டு, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்புவரை இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின்னர் கல்வியைத் தொடர மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் ஆசைதம்பி மாணவர்களின் திறமைகளைக் கண்டுபிடித்து குத்துச்சண்டை பயிற்சி அளித்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இப்பகுதி மாணவர்களை பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று குத்துச்சண்டை போட்டிகளில் கேடயங்கள், பதக்கங்களும் வென்றுள்ளனர். மேலும் இந்த உறைவிடப் பள்ளியில் படித்தவர்களில் இதுவரை 23 மாணவ மாணவிகள் பட்டப்படிப்பை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வீரசிவாஜி என்ற மாணவர் 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தஞ்சாவூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை வென்று,