மதுரை: விருதுநகரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “விருதுநகர் மாவட்டம் சோலைசேரியில் எனது சொந்த பயன்பாட்டிற்காக 15 சென்ட் நிலம் வாங்கி அதனை முறையாக பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் கட்டி பதிவு செய்யச் சென்றேன்.
நான் வாங்கி பதிவு செய்யச் சென்ற இடம் பதிவு செய்ய முடியாது என பதிவாளர் பதிவு செய்ய மறுத்துவிட்டார். அதற்கு காரணம் கேட்டபோது பத்திர பதிவுச் சட்டம் 22 ஏ2 (2017 ஆண்டு சட்டம்) பிரிவின்படி அங்கீகாரம் செய்யாத மனை நிலங்களை பதிவு செய்ய முடியாது என தெரிவித்து விட்டனர்.
மேலும், இந்த சொத்துக்களை விற்பனை செய்வதே தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இந்த பதிவுச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல, இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஒவ்வொருவரும் சொத்துக்களை வாங்க, விற்பனை செய்ய உரிமை உள்ளது.