தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சாட்சி விசாரணையைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Senthil Balaji case - SENTHIL BALAJI CASE

Senthil Balaji case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், சாட்சி விசாரணையை தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 5:34 PM IST

சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், சாட்சி விசாரணை துவங்கி விட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முதன்மை அமர்வு நீதிமன்றம் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைக்கான முகாம் அமைக்க உத்தரவு! - kalvarayan hill people

ABOUT THE AUTHOR

...view details