தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா? - Chennai Traffic Changes

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 10:58 AM IST

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, எங்கெங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Representative Image (ETV Bharat)

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று (ஆக.18) மாலை நடைபெற இருக்கிறது. இந்த விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், தேசிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"18.08.2024 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம், வாலாஜா சாலை. அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

3. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம், PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

5. பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் VVIP-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர்சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:“காந்தி பெயர் வைத்தால் குடிக்கக்கூடாதா?”.. வெங்கட் பிரபு கேள்வி! - THE GOAT TRAILOR LAUNCH

ABOUT THE AUTHOR

...view details