திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன்(28). இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில், இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் சரண்யா(31) என்ற செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தன்னுடைய விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து விலகி விடுவதாகச் செவிலியர் சரண்யாவை மருத்துவர் சீனிவாசன் மிரட்டியதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், மன உலைச்சலுக்கு ஆளான சரண்யா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.