தமிழ்நாடு

tamil nadu

சிவராத்திரி சிறப்பு பேருந்துகள்.. கூடுதலாக பேருந்துகள் இயக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 6:29 PM IST

Tamil Nadu Transport Corporation: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையிலிருந்து மற்ற மாவட்டத்திற்கு கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

maha-shivratri-continuously-special-buses-arrangement-for-tn-transport-corporation-in-chennai
சிவராத்திரிக்கு ஊருக்கு போறீங்களா? உங்களுக்காகத் தமிழகப் போக்குவரத்துத் துறை செய்துள்ள சிறப்பு ஏற்பாடு..

சென்னை:மகா சிவராத்திரி, சுப முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் 8ஆம் தேதி மகா சிவராத்திரி, சுப முகூர்த்தம் 9 மற்றும் 10 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 7 அன்று 270 பேருந்துகளும், மார்ச் 8 அன்று 390 பேருந்துகளும், மார்ச் 9 அன்று 430 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 8 மற்றும் மார்ச் 9 அன்று 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக மார்ச் 7 அன்று 270 சிறப்புப் பேருந்துகளும், மார்ச் 8 அன்று 390 பேருந்துகளும் மற்றும் மார்ச் 9 அன்று 430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் மார்ச் 7 அன்று 9,096 பயணிகளும், மார்ச் 8 அன்று 7,268 பயணிகளும் மார்ச் 9 அன்று 3,769 பயணிகளும் மற்றும் மார்ச் 10 அன்று 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?

ABOUT THE AUTHOR

...view details