தமிழ்நாடு

tamil nadu

திடீரென்னு டென்ஷனான அமைச்சர் நிர்மலா சீதாராமன்! அப்படி என்ன கேட்டுட்டாரு அந்த கோவை இளைஞர்? - nirmala sitharaman angry

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 9:55 PM IST

செமிகண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன்? என்று இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்வியை கேட்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமடைந்த சம்பவம் கோவையில் இன்று நிகழ்ந்தது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோயம்புத்தூர் வந்தார். நேற்றைய தினம் கொடிசியாவில் பல்வேறு தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில், இன்று வந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன்" என தெரிவித்தார்.

பின்னர் இன்று(செப் 12) சூலூர், ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிய போது, அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர் நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமிகண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க :'டெல்லி போனதும் கட்டாயம் பேசுவேன்' ஜிஎஸ்டி கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் உறுதி! - Nirmala Sitharaman

இதனால் ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன் அந்த இளைஞரிடம் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

மீண்டும் அந்த இளைஞர் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்க முற்பட்டதால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களே ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்றார். பிறகு அந்த இளைஞரை இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என எச்சரித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரை அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details