தூத்துக்குடி:உலகம் முழுவதும் நாளை (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று ஒருவரின் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலர்கள் தங்களுக்குள் ரோஜா மலர்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருந்ததால் மலர் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சிகப்பு வண்ணங்களில் உள்ள ரோஜாக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
அதன்படி, வழக்கமாக ரோஜா பூ ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கட்டு ரூ.500 வரை விற்பனை ஆகிறது. தனியாக ஒரு ரோஜா பூ ரூ.15-க்கு விற்பனையான நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு ரோஜா பூ ரூ.30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.