சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில், "7 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும், மேலும், புயலின் முன் பகுதி கரையைத் தொட்டது எனவும், இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும்" என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் சமூக வலைத்தள பதிவு : "ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், மகாபலிபுரத்திற்கு 40 கி.மீ கிழக்கே-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.
இப்புயல் வரக்கூடிய மணி நேரத்தில் மேற்கு திசையில் மிக மெதுவாக நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு மேல் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம் அல்லது மகாபலிபுரத்தை மையமாக வைத்து புயலின் முன்பகுதி கரையை கடக்க துவங்கும். கரையை கடக்கும் நிகழ்வு நாளை அதிகாலை வரை தொடரக்கூடும்" என பதிவில் கூறப்பட்டுள்ளது.