சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தம வில்லன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் வீட்டில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை நடிகை பார்வதி நாயர் வீட்டில் வைத்து அடித்து துன்புறுத்தியதாக சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே தேர்தல்; சீமான், திருமாவளவன் சொல்வது என்ன?
அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பார்வதி நாயர் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், இளங்கோவன், செந்தில் முருகன், அஜித், ராஜேஷ் ஆகிய ஏழு பேர் மீது மூன்று பிரிவுகளில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் மது அருந்தியதைப் பார்த்ததால், தன்னை நண்பர்களுடன் சேர்ந்து அடித்ததாகவும், தன் மீது எச்சிலை உமிழ்ந்ததாக அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்