தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம்; 400 உதவி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! - TN MEDICAL COUNCIL DOCTORS

உதவி மருத்துவர்கள் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் சான்றிதழ் காலம் தாழ்ந்து கிடைத்ததால் பாதிக்கப்பட்டுள்ள தங்களையும், பணி நியமன கலந்தாய்வில் இடம் பெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம்
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சான்றிதழ் கிடைப்பதில் காலதாமதம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 9:11 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள உதவி மருத்துவப் பணியிடங்களில் 2,642 மருத்துவர்கள் MRB மூலம் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது. 2,553 மருத்துவர்களை நியமிப்பதற்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க கூடுதலாக 89 காலியிடங்களும் அறியப்பட்டது.

மொத்தமாக 2,642 மருத்துவ காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முடிவுற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர், 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான சான்றிதழை பதிவு செய்து, மருத்துவராக பணிபுரிவதற்கான உரிமத்தை 2024 ஜூலை 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெறாததால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சாய் கணேஷ், "மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,642 பணியிடங்களுக்கு ஜனவரி மாதம் 5ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியதன் அடிப்படையில், 14,855 மருத்துவர்கள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களில், 4,585 மருத்துவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இவர்களில் 400 பேர் 2018ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்கள். நாங்கள் 2024 ஜூலை 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப்பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்தும் கிடைக்காத நிலையில், தற்காலிக சான்றிதழை வைத்து விண்ணப்பம் செய்தோம்.

தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டோம். அப்போது தற்காலிக பதிவு சான்றிதழ் வைத்து விண்ணப்பம் செய்ததற்கான விளக்கத்தையும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்தோம். ஆனால், தற்போது இறுதிப் பட்டியலில் 400 பேரின் பெயரும் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க:மனைவி சொத்துக்கள் மறைப்பு: மாவட்ட நீதிபதிக்கு வழங்கிய கட்டாய ஓய்வை உறுதி செய்த நீதிமன்றம்!

நிரந்தர மருத்துவப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு காரணம் பல்கலைக்கழகத்தில் இருந்து நிரந்தர பதிவு செய்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே ஆகும். கல்லூரிகளிலும் குறிப்பிட்ட நாளில் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்வதிலும், அனுமதி கிடைக்கவில்லை. மருத்துவத்துறையின் நிர்வாக தாமதத்தால் தான் எங்களால் நிரந்தரமாக மருத்துவப் பதிவு சான்றிதழ் பெற முடியவில்லை.

இது குறித்து மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரிடமும் எடுத்துக் கூறியுள்ளோம். ஆனாலும், நிரந்தரப் பதிவு செய்யவில்லை என்பதற்காக தரவரிசைப் பட்டியலில் 1,800 பேரில் உள்ள 200க்கும் மேற்பட்டவர்களும், உதவி மருத்துவப் பணியாளர் பட்டியலில் 400 பேரும் பாதிக்கப்பட்டுள்ளோம். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் விதிகளின்படி, பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. மருத்துவத்துறையில் ஏற்பட்ட கால தாமதத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details