சென்னை : பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வளாகங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் வரி வசூலிப்பதற்கு ஏதுவான சட்ட மசோதாவை சட்ட சபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார்.
அதில், கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க :சட்டப்பேரவையை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவதாக கூறினீர்களே? - சபாநாயகரை நோக்கி இபிஎஸ் கேள்வி!
இந்த மசோதா சட்டசபையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மசோதாவுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர்.