சென்னை: தொண்ணூறுகளில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்த நடிகை கௌதமி, தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துக்களை வாங்கிய நிலையில், 2004-ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, அந்த சொத்துக்களை விற்பதற்காகச் சினிமா தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான C.அழகப்பன் என்பவரை பவர் ஆஃப் அட்டர்னியாக நியமித்திருந்தார்.
அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று, செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கிய அழகப்பன், அந்த நிலத்தை நடிகை கௌதமி பெயரிலும், தனது மனைவி நாச்சல் பெயரிலும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக நடிகை கௌதமி அளித்த புகாரில் அழகப்பன், நாச்சல் மற்றும் இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் K.M.பாஸ்கர், ஓட்டுநர் G. சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த சூழலில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனின் மனைவி நாச்சல் மற்றும் மருமகள் ஆர்த்தி தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.