தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் கலந்தாய்வு; 63 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு! - TNEA SEAT ALLOTMENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 5:24 PM IST

TNEA SEAT ALLOTMENT: பி.இ., மற்றும் பி.டெக்., பொறியியல் படிப்பில் இரண்டாம் சுற்று கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக ஒதுக்கீடாக 63 ஆயிரத்து 729 மாணவர்களுக்கு கல்லூரிகளில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுளளதை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு 2ஆம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. தரவரிசை எண் 26,655 முதல் 1,04,602 வரை 85 ஆயிரத்து 295 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தற்பொழுது தற்காலிக ஒதுக்கீடாக 63 ஆயிரத்து 729 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் இளங்கலையில் 2,33,376 இ்டங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் கட்ட கலந்தாய்வில் 19 ஆயிரத்து 922 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்-ஆஃப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 12ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் கொடுத்துள்ள விருப்ப பட்டியலின் அடிப்படையில் 13ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதனை மாணவர்கள் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில் 15ம் தேதி காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணையும், UPWARD கொடுத்த மாணவர்களுக்கு அதற்கான படிவமும் மாணவர்களுக்கு அனுப்பப்படும்.

தொடர்ந்து ஆக.15 முதல் 20 வரை மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பொது பிரிவில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 713 இடங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 21 இடங்களிலும் என‌ ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 734 இடங்கள் இருந்தன.

பொதுப்பிரிவில் 77 ஆயிரத்து 948 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டத்தில், 62 ஆயிரத்து 270 மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளை பதிவு செய்தனர். அவர்களில் 55 ஆயிரத்து 875 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 9,494 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில் 8,738 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனர். அவர்களில் 7,854 மாணவர்களுக்கும் என 63 ஆயிரத்து 729 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனப் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.380 நிதி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! - MINISTER ANBIL MAHESH

ABOUT THE AUTHOR

...view details