சேலம்:டின்பில் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக்(TNPL 2024) கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஜூலை 5 ஆம் தேதி சேலத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் 6வது லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ், ஷிஜித் சந்திரன் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை எதிர் கொண்டது.
சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 51 ரன்களும், விமல் குமார் 47 ரன்களும் விளாசி இருந்தனர். சேலம் அணி தரப்பில் ஹரிஷ் குமார் மற்றும் சன்னி சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆஷிக், பொய்யாமொழி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின், ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் மற்றும் கவின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து 59 ரன்கள் சேர்த்தனர்.
இதில் 28 ரன்கள் எடுத்து இருந்த அபிஷேக், வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் தினேஷ் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கவின் 46 ரன்களுக்கு விக்கெட் இழந்தார்.