கோவை:கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணி - மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு லெவன் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தமிழ்நாடு லெவன் அணியில் அதிஷ் மற்றும் லோகேஷ்வர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்தனர். லோகேஷ்வர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் அதிஷ் தன் பங்குக்கு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின் கூட்டணி அமைத்த பிரதோஷ் ரஞ்சன் பவுல் - பாபா இந்திரஜித் அணியை தங்களின் நிதான ஆட்டத்தின் மூலம் வழிநடத்திச் சென்றனர். இருவரும் அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வந்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த ஜோடியை மும்பை வீரர் தனுஷ் கோடியன் பிரித்தார்.