தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"எதிர்காலத்துக்கும் உங்கள் அறிவை கொஞ்சம் சேமியுங்கள்"- முன்னாள் வீரருக்கு முகமது ஷமி பதிலடி! - MOHAMMED SHAMI ON SANJAY MANJREKAR

ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது ஊதியம் குறித்து கருத்து தெரிவித்து இருந்த முன்னாள் இந்திய வீரருக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Etv Bharat
Mohammed Shami (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 21, 2024, 3:56 PM IST

ஐதராபாத்:18வது ஐபிஎல். தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2 வீரர்களையும், பெங்களூரு அணி 3 பேரையும், டெல்லி 4 பேரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை. இதனால் அவரை ஏலத்திற்கு முன்பாக குஜராத் நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. ஆனால் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷமி உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

Mohammed Shami Insta Post (Mohammed Shami Instagram Story)

இதனால் ஐபிஎல். ஏலத்தில் பல அணிகள் இவரை வாங்க மும்முரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடிக்கடி காயத்தை சந்திக்கும் முகமது ஷமியை எந்த அணியும் பெரிய தொகைக்கு வாங்காது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.

இதனால் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் முகமது ஷமியின் சம்பளம் கடந்த வருடத்தை காட்டிலும் வெகுவாக குறையலாம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்தார். இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர், ஷமியை வாங்குவதற்கு கண்டிப்பாக அணிகளிடம் ஆர்வம் அதிகம் இருக்கும், ஆனால் முகமது ஷமி காயங்கள் சந்தித்த வரலாறு அதிகம்.

சமீபத்திய காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார். எனவே ஒரு ஐபிஎல். அணி அவர் மீது அதிகப்படியான தொகையை முதலீடு செய்து பின்னர் அவர் காயத்தால் வெளியேறினால் அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். அதனால் அவருடைய சம்பளத்தில் பெரிய சரிவு ஏற்படும் கவலை இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மஞ்ரேக்கரின் இந்த கருத்திற்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்களுடைய அறிவை கொஞ்சம் உங்கள் எதிர்காலத்திற்காகவும் பயன்படுத்துங்கள். யாராவது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இவரை தொடர்பு கொள்ளவும்" என்று முகமது ஷமி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எனக்கென்று தனி ஸ்டைல் இருக்கிறது... கெத்து காட்டும் பும்ரா! பலிக்குமா? பழிதீர்க்குமா?

ABOUT THE AUTHOR

...view details