பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவின் கால் இறுதி போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் அணி ஸ்பெயினின் கானல்ஸ் எலியா மற்றும் அச்சா கோன்சலஸ் பாப்லோ அணியை எதிர்கொண்டது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 4வது பதக்கம்! இந்திய வில்வித்தை அணி அசத்தல்! - paris olympics 2024
Published : Aug 2, 2024, 6:27 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதியானது.
அபாரமாக விளையாடிய இந்திய அணி 5-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது. தொடக்கம் முதலே நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் துரித புள்ளிகள் சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. மேலும் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பையும் இருவரும் பெற்றனர்.
இதையும் படிங்க:வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய பாக். ரசிகர்! தரமான செய்கை செய்த ஹர்பஜன்! என்ன நடந்தது தெரியுமா? - Harbhajan Singh