சென்னை: மழைக்காலம் வந்துவிட்டால், பல வகையான பருவ நோய்களும் உடன் வரும் நிலையும் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக டெங்கு, டைபாய்டு, நிமோனியா, மலேரியா, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் பாதிப்பு அதிவேகமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது, டெங்கு.
இந்த டெங்கு காய்ச்சல் தொற்று பற்றி மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு அச்சம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு காரணம், இந்த நோய் பாதிப்பால் உடலில் ஓடும் ரத்தத்தின் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து, எளிதில் குணமடையும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பாதால் தான். இதேபோல் மலேரியா, டைபாய்டு தொற்றுகளிலும் இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அதிகரிக்கும் சூழல் இருக்கிறது.
பிளேட்லெட்டுகள் என்றால் என்ன?இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் சில நேரங்களில் உயிரிழப்பு நேரிடும் அபாயமும் உள்ளது. இந்நேரத்தில் முக்கியமாக ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த பிளேட்லெட்டுகள் இரத்தத் தட்டு என்றும் த்ரம்போசைட் என்று அழைக்கப்படுகிறது. நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்கள் (Red blood cell) வெள்ளை ரத்த அணுக்கள் (white blood cells) இருப்பது போல் இந்த பிளேட்லெட்டுகளும் இருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், இவைதான் ரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ரத்த பிளேட்லெட்டுகள் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகி, ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. எனவே, இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்குறது. எனவே, இவ்வாறான ரத்த ஓட்டத்தை சீர் செய்யவும், பிளேட்லெட்டுகளின் எண்ணிகையை இயற்கையாக பழங்கள் தின்பது மூலம் அதிகரிக்கும் வழியை இந்த கட்டுரையில் காணலாம். இதில் முக்கிய கனியாக இருக்கும் 5 பழங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பப்பாளி:பப்பாளி பழம் பொதுவாக பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழமாகும். இந்த பழம் சருமத்திற்கு இயற்கை பொழிவையும், உடலுக்கு இரும்புச் சத்தையும் அதிகமாக தரக்கூடியது. அதன் இலைகளும் பல ஆரோக்கிய பயன்களை தரக்கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த இலைகள் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொண்டவை. அதனால் பப்பாளி பழத்துடன் சேர்த்து அதன் இலையையும் சாப்பிட்டால் நல்லது என பல பாட்டி மருத்துவ முறையில் கேள்விப்பட்டிருப்போம். எனவே, டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பின் போது தினமும் ஒரு சில துண்டுகள் பச்சை பப்பாளியை சாப்பிடலாம் அல்லது வெறும் வயிற்றில் இலைகளின் சாறு எடுத்து குடிப்பது மூலம் ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த பப்பாளியின் நற்பலன் குறித்து 2019ஆம் ஆண்டில் வெளியான "ஃபிரான்டியர்ஸ் இன் பீடியாட்ரிக்ஸ்" ஆராய்ச்சி இதழின் ஆய்வுப்படி, டெங்கு காய்ச்சலால் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிளேட்லெட் எண்ணிக்கை பப்பாளி இலைச்சாறு குடித்து வந்ததால் கணிசமாக அதிகரித்ததுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் டேவிட் டான் கூறியுள்ளார்.