சென்னை: 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ’மரகத நாணயம்’. தமிழ் சினிமாவில் வெளிவந்த பேண்டஸி ஜானர் படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக மரகத நாணயம் பார்க்கப்படுகிறது. பேண்டஸி ஜானரில் நகைச்சுவையுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து இப்போது வரை பலருக்கும் விருப்பமான திரைப்படமாக இது இருந்து வருகிறது.
நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் என பலரும் நடித்திருந்தனர். திபு நினன் தாமஸ் இசையமைத்த இப்படத்தின் ’நீ கவிதைகளா’ என்ற பாடல் இன்றளவும் பலரது ப்ளேலிஸ்டை ஆக்கிரமித்து வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்தார். ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது சமீபத்தில் நடந்த நேர்காணலில் மரகத நாணயம் இரண்டாம் பாகத்தைப் பற்றிய தகவலை சொல்லியுள்ளார் நடிகர் ஆதி.
ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. ’ஈரம்’, ’வல்லினம்’ ஆகிய படங்களின் இயக்குநர் அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆதி அளித்த பேட்டியில் ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.