சத்தீஸ்கர் (தம்தாரி):சத்தீஸ்கர் மாநிலம் குருட் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மோக்ராவைச் சேர்ந்த சிறுவர் பித்தம் சந்திரகர். இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான மயங் துருவ் மற்றும் சர்ரா பகுதியைச் சேர்ந்த ஹுனேந்திர சாஹு மற்றும் பக்கரை பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் யாதவ் ஆகிய மூவருடன் டிராக்டரில் வேளாண் கல்லூரி நோக்கிச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் சர்ரா கிராமம் அருகே 100 மீட்டர் முன்பு செங்குத்தான திருப்புமுனையில் வளைய நினைத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் நான்கு பேரில் மூன்று சிறுவர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.