டெல்லி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கும் விதமாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவியல் சட்டங்களின் சீர்திருத்தங்களுக்கான குழுவை அமைத்தது.
அதில் தலைவர், கன்வீனர் (Convener) மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர். அதன் அமைப்பு அவ்வப்போது மாற்றப்பட்டது, ஆனால் இறுதியில் குழுவில் ஒரு கன்வீனரும், ஐந்து உறுப்பினர்களும் இருந்தனர். ஒரு உறுப்பினரைத் தவிர மற்ற அனைவரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களாகப் பணியாற்றினர் மற்றும் குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.
இந்த குழுதான் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் வரைவுகளை சமர்ப்பித்தது. இறுதியில், நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றியது. அத்தகைய முக்கியமான மசோதாக்களை உருவாக்குவது சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். பகுதி நேரமாகப் பணியாற்றிய மற்றும் பிற பொறுப்புகளைக் கொண்ட ஒரு குழுவிடம் அல்ல" எனக் குறிப்பிட்டு இருந்தார்.