ஜமாபந்தி முகாமில் குவிந்த மனுக்களுக்கு தீர்வு
பெரம்பலூர்: வருவாய் தீர்வாயம் என்று சொல்லப்படும் ஜமாபந்தி முகாம், வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று நடைப்பெற்றது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய ஜமாபந்தி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கலந்து கொண்டார். இதில் பட்டா சிட்டா உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த முகாம் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.