ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை... நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்! - Rain News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11642544-thumbnail-3x2-vnr.jpg)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக நெல் விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமடைந்தது.