வீணையில் தேசியக் கீதத்தை மீட்டிய மாணவர்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அஜய் பிரசன்னன். இசையின் மீது ஆர்வம் கொண்ட இவர், குடியரசு தினத்தை முன்னிட்டு வீணை இசை கருவி மூலமாக தேசியக் கீதத்தை வாசித்துள்ளார். இவரின் இந்த செயல் அனைவரின் பாரட்டையும் பெற்றுள்ளது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபிட்ஜெட் ஸ்பின்னர்(FIDGET SPINNER) மூலம் உலக கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.