தீபாவளிப் பண்டிகையன்று பெண்கள் கலையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் ரங்கோலி கோலமிடுவர். அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கேலரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 40 பெண் கலைஞர்கள் இணைந்து 120 பிரமாண்ட ரங்கோலி கோலங்களைத் தீட்டினர். வண்ணப்பொடிகளால் தீட்டப்பட்ட இந்த ரங்கோலியை பலரும் பார்த்து ரசித்தனர்.