ETV Bharat / state

முன் விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை - The murder of the plaintiff

விருதுநகர்: முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மல்லாங்கிணறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அக்னி ராமன்
கொலை செய்யப்பட்ட அக்னி ராமன்
author img

By

Published : Mar 16, 2020, 6:02 PM IST

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் அக்னி ராமன் (31). இவர் இன்று காலை வழக்கம் போல, மாந்தோப்பு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

பின்னர், பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மல்லாங்கிணறு காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், முதலுதவி அளித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் ஒருவரைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட அக்னி ராம், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளார். எனவே, முன் பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இளைஞரைக் கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினர் கைது

விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பில்டிங் காண்ட்ராக்டர் அக்னி ராமன் (31). இவர் இன்று காலை வழக்கம் போல, மாந்தோப்பு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

பின்னர், பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மல்லாங்கிணறு காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், முதலுதவி அளித்தும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் ஒருவரைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட அக்னி ராம், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளார். எனவே, முன் பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இளைஞரைக் கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.