ETV Bharat / state

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரழப்பு!

author img

By

Published : Mar 31, 2020, 4:26 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்
சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (34). இவர் வீட்டின் அருகே அமர்ந்து வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது வீட்டின் சுற்றுச்சுவர் சாய்ந்து விழுந்ததில் கற்பகம் சுவரின் இடிபாட்டில் சிக்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கற்பகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்

ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கற்பகம் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பீதியில் ஊர் மக்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகம் (34). இவர் வீட்டின் அருகே அமர்ந்து வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது வீட்டின் சுற்றுச்சுவர் சாய்ந்து விழுந்ததில் கற்பகம் சுவரின் இடிபாட்டில் சிக்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கற்பகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்

ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கற்பகம் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காய்ச்சலால் பெண் உயிரிழப்பு: பீதியில் ஊர் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.