ETV Bharat / state

கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத காவல் துறை: நூதன முறையில் போராட்டத்தில் இறங்கிய பெண்

author img

By

Published : Oct 15, 2020, 7:20 PM IST

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் சாலையில் செங்கற்களை அடுக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Woman
Woman

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அய்யனார்கோயில் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும்; இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைந்து போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து வந்துள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி செல்வராணி (35) செங்கற்களை சாலையில் அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்ட செல்வராணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட அனைவரிடமும் ஏற்கெனவே இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும்; ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று(அக்.15) அய்யனார் கோயில் செல்லும் சாலையில் செங்கற்களை அடுக்கித் தனி ஒரு பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்; மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் அப்பெண்ணிடம் காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில், இப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அய்யனார்கோயில் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும்; இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைந்து போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து வந்துள்ளனர்.

இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி செல்வராணி (35) செங்கற்களை சாலையில் அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்ட செல்வராணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட அனைவரிடமும் ஏற்கெனவே இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும்; ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று(அக்.15) அய்யனார் கோயில் செல்லும் சாலையில் செங்கற்களை அடுக்கித் தனி ஒரு பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்; மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் அந்தப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் அப்பெண்ணிடம் காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில், இப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.