ETV Bharat / state

பிளஸ்-2 மாணவர் தற்கொலை: 3 பேர் மீது வழக்குப்பதிவு - Virudhunagar +2 Student Suicide Police Filled Case

விருதுநகர்: 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் பிளஸ்-2 மாணவர் தற்கொலை 3பேர் மீது வழக்கு பிளஸ்-2 மாணவர் தற்கொலை 3பேர் மீது வழக்குப்பதிவு விருதுநகர் பிளஸ்-2 மாணவர் தற்கொலை Virudhunagar +2 Student Suicide Case Virudhunagar +2 Student Suicide Police Filled Case Aruppukottai Virudhunagar +2 Student Suicide Police Filled Case
Virudhunagar +2 Student Suicide Case
author img

By

Published : Jan 24, 2020, 8:55 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழகன்னிச்சேரி பகுதியைச் சேர்ந்த நாகநாதனின் மகன் ஹரிஷ்பாபு (17). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஹரிஷ்பாபு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, மாணவரின் தந்தை நாகநாதன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ’கடந்த 21ஆம் தேதி ஹரிஷ்பாபுவும் அவருடன் படிக்கும் மாணவரும் விடுதி காப்பாளர் அனுமதியில்லாமல் வெளியில் சென்று உணவு அருந்தி வந்துள்ளனர்.

இதையடுத்து, விடுதி காப்பாளர் அளித்த தகவலின் பேரில் பள்ளி தலைமையாசிரியர் தன்னை வரவழைத்து ஹரிஷ்பாபுவைக் கண்டித்து இனிமேல் இவ்வாறு நடந்தால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிடுவேன் எனக் கூறி 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் ஆறுமுகம் என்பவர் பாபுவை அடித்துள்ளார்.

பிளஸ்-2 மாணவர் தற்கொலை

இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே, தனது மகன் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், விடுதி காப்பாளர், பள்ளி கணித ஆசிரியர் ஆறுமுகம் உட்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் கீழகன்னிச்சேரி பகுதியைச் சேர்ந்த நாகநாதனின் மகன் ஹரிஷ்பாபு (17). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஹரிஷ்பாபு விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, மாணவரின் தந்தை நாகநாதன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ’கடந்த 21ஆம் தேதி ஹரிஷ்பாபுவும் அவருடன் படிக்கும் மாணவரும் விடுதி காப்பாளர் அனுமதியில்லாமல் வெளியில் சென்று உணவு அருந்தி வந்துள்ளனர்.

இதையடுத்து, விடுதி காப்பாளர் அளித்த தகவலின் பேரில் பள்ளி தலைமையாசிரியர் தன்னை வரவழைத்து ஹரிஷ்பாபுவைக் கண்டித்து இனிமேல் இவ்வாறு நடந்தால் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிடுவேன் எனக் கூறி 5,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் ஆறுமுகம் என்பவர் பாபுவை அடித்துள்ளார்.

பிளஸ்-2 மாணவர் தற்கொலை

இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். எனவே, தனது மகன் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், விடுதி காப்பாளர், பள்ளி கணித ஆசிரியர் ஆறுமுகம் உட்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது!

Intro:
விருதுநகர்
24-01-2020

பிளஸ்-2 மாணவர் தற்கொலை
தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு

Tn_vnr_06_police_case_filed_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழகன்னிச்சேரியைச் சேர்ந்த ஹரிஸ்பாபு (17) என்ற மாணவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, மாணவரின் தந்தை நாகநாதன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 21ம் தேதி ஹரிஸ்பாபுவும் உடன் படிக்கும் மாணவரும் அனுமதியில்லாமல் வெளியில் சென்று உணவு அருந்தி வந்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் நாகராதனுக்கு வரவழைத்து மாணவரைக் கண்டித்து இனிமேல் இவ்வாறு நடந்தால் மாற்றுச் சீட்டு கொடுத்து விடுவேன் என்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ஹரிஸ்பாபு விடுதி அறையில் தூக்குப் போட்டு இறந்துள்ளார் என்றும், பள்ளிக்கு வந்து விசாரித்தபோது கணித ஆசிரியர் ஆறுமுகம் என்பவர் அடித்ததாக தகவல் கிடைத்ததாகவும் எனவே, தனது மகன் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், பள்ளியின் விடுதி காப்பாளர், பள்ளி கணித ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.