ETV Bharat / state

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

author img

By

Published : Feb 19, 2020, 8:54 PM IST

விருதுநகர் : சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

virudhunagar
virudhunagar

விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்குச் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15 அறைகள் உள்ளன.

பட்டாசு ஆலையில் சீனி வெடி தயாரிப்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்து சாத்தூர், சிவகாசியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

இருப்பினும் இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து தொடர்பாக சாத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஒருவர்காயம்

விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்குச் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15 அறைகள் உள்ளன.

பட்டாசு ஆலையில் சீனி வெடி தயாரிப்பில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்து சாத்தூர், சிவகாசியைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

இருப்பினும் இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து தொடர்பாக சாத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஒருவர்காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.