ETV Bharat / state

கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 7, 2020, 1:21 AM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாத்தூரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

accident
accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (52), பாலசுந்தரம் (60) ஆகிய இருவர் சாத்தூர் அருகே உள்ள தனியார் வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த குமரேசன் (40) என்பவர் திண்டுக்கல்லிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பெட்ரோல் பங்க் அருகே எதிர்பாராதவிதமாக சந்திரசேகரன் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் இப்ராகிம் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தொழிலபதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (52), பாலசுந்தரம் (60) ஆகிய இருவர் சாத்தூர் அருகே உள்ள தனியார் வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த குமரேசன் (40) என்பவர் திண்டுக்கல்லிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பெட்ரோல் பங்க் அருகே எதிர்பாராதவிதமாக சந்திரசேகரன் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் இப்ராகிம் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள தொழிலபதிபர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.