ETV Bharat / state

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

author img

By

Published : Aug 24, 2019, 12:00 AM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைக் கிராமத்தில் மீனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலையிலிருந்து பட்டாசுகள் வாங்கி வந்து குடோனில் இறக்கி வைக்கும் போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

இந்த வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரமேஷ் (38), அவருடன் இருந்த விஸ்வநத்ததைச் சேர்ந்த தர்மர் (40) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் அவருடன் வந்த ஒரு நபர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவ விடாமல் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைக் கிராமத்தில் மீனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலையிலிருந்து பட்டாசுகள் வாங்கி வந்து குடோனில் இறக்கி வைக்கும் போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து 2 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

இந்த வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரமேஷ் (38), அவருடன் இருந்த விஸ்வநத்ததைச் சேர்ந்த தர்மர் (40) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் அவருடன் வந்த ஒரு நபர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவ விடாமல் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:விருதுநகர்
23-08-19

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து 2 பேர் உடல் சிதறி பலி

Tn_vnr_05_crackers_fire_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைக் கிராமத்தில் மீனம்பட்டி சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த நிலையில் இன்று பட்டாசு ஆலையிலிருந்து இன்று பட்டாசுகள் வாங்கி வந்து குடோனில் இறக்கி பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது காரில் இருந்து பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரமேஷ் (38) மற்றும் அவருடன் இருந்த விஸ்வநத்ததை சேர்ந்த தர்மர் (40) ஆகிய இருவரும் வெடி விபத்தில் உடல் சிதறி சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.
மேலும் இவருடன் வந்த ஒரு நபர் காயமடைந்தனர்... இந்த விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவ விடாமல் தீயை அனைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.