விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைக் கிராமத்தில் மீனம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆலையிலிருந்து பட்டாசுகள் வாங்கி வந்து குடோனில் இறக்கி வைக்கும் போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் ரமேஷ் (38), அவருடன் இருந்த விஸ்வநத்ததைச் சேர்ந்த தர்மர் (40) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் அவருடன் வந்த ஒரு நபர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவ விடாமல் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.