ETV Bharat / state

11ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - பேயனாற்று ஓடையில் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேயனாற்று ஓடையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

student death water
author img

By

Published : Nov 18, 2019, 10:37 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் செண்பக தோப்பு பேயனாற்று ஓடையில் நீர்வரத்து அதிகமாக வர தொடங்கியுள்ளது.

இதனால், இப்பகுதியில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில் ராஜபாளையம் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் கண்ணன் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். நீச்சல் தெரியாத மாணவர் கண்ணன் தனது எட்டு நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பேயனாற்று ஓடையில் குளிக்க சென்றுள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்

ஓடையில் நீச்சல் கற்றுக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மம்சாபுரம் காவல் துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 2 பெண் பிள்ளைகள் போதாதாம்: ஆண் குழந்தை கேட்டு அமெரிக்க மாப்பிள்ளை டார்ச்சர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் செண்பக தோப்பு பேயனாற்று ஓடையில் நீர்வரத்து அதிகமாக வர தொடங்கியுள்ளது.

இதனால், இப்பகுதியில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில் ராஜபாளையம் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மகன் கண்ணன் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். நீச்சல் தெரியாத மாணவர் கண்ணன் தனது எட்டு நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பேயனாற்று ஓடையில் குளிக்க சென்றுள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்

ஓடையில் நீச்சல் கற்றுக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மம்சாபுரம் காவல் துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 2 பெண் பிள்ளைகள் போதாதாம்: ஆண் குழந்தை கேட்டு அமெரிக்க மாப்பிள்ளை டார்ச்சர்

Intro:விருதுநகர்
18-11-19

ஓடையில் குளிக்க சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Tn_vnr_03_student_death_water_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேயனாற்று ஓடையில் 8 நண்பர்களுடன் குளிக்க சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பரவளாக மழை பெய்து வருவதால் செண்பகதோப்பு பேயனாற்று ஓடையில் நீர்வரத்து அதிகமாக வர தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இராஜபாளையம் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி காலனியை சேர்ந்த சதீஷ்குமார் இவரது மகன் கண்ணன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல் தெரியாத மாணவர் கண்ணன் தனது 8 நண்பர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பேயனாற்று ஓடையில் குளிக்க சென்றுள்ளார். ஓடையில் நீச்சல் கற்று கொண்டு இருக்கும் போது எதிர் பாரதவிதமாக நீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மம்சாபுரம் காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.