ETV Bharat / state

ஆறு மயில்கள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை!

author img

By

Published : Apr 27, 2020, 10:20 AM IST

Updated : Apr 27, 2020, 12:17 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஆறு மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மமான முறையில் ஆறு மயில்கள் இறப்பு: வனத் துறை விசாரணை!
மர்மமான முறையில் ஆறு மயில்கள் இறப்பு: வனத் துறை விசாரணை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஆறு மயில்கள் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு வனத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் உயிரிழந்த ஆறு மயில்களின் உடலை கைப்பற்றினர். ஆறு மயில்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வயல்களில் மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மயில்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்து வனத் துறை

மேலும் இது தொடர்பாக கத்தாளம்பட்டி தலையாரி முருகேஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீர் மழை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஆறு மயில்கள் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு வனத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் உயிரிழந்த ஆறு மயில்களின் உடலை கைப்பற்றினர். ஆறு மயில்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வயல்களில் மயில்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மயில்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்து வனத் துறை

மேலும் இது தொடர்பாக கத்தாளம்பட்டி தலையாரி முருகேஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் அம்மாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திடீர் மழை: மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

Last Updated : Apr 27, 2020, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.