விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென்வடல் புது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் (16). இவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இசக்கியம்மாள் வீட்டில் பெற்றோர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை பெற்றோர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டபோது, அதைத் தடுக்க இசக்கியம்மாள் முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் சண்டையிட்டனர்.
இதனால் மனமுடைந்த இசக்கியம்மாள், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் இசக்கியம்மாளுக்கு 90 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த இசக்கியம்மாளை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.