ETV Bharat / state

விருதுநகரில் கல்லூரி பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்

author img

By

Published : May 6, 2022, 2:25 PM IST

Updated : May 6, 2022, 4:33 PM IST

விருதுநகர் அருகே தனியார் கல்லூரி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்
விருதுநகரில் கல்லூரி பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், சாத்தூர் அருகே உள்ளி ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்துபோது, பேருந்தின் மெயின் ஆக்சில் கட் ஆனதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.

விருதுநகரில் கல்லூரி பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்

தீவிர சிகிச்சையில் 6 மாணவிகள்: இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 6 மாணவிகளை மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஸ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், சாத்தூர் அருகே உள்ளி ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்துபோது, பேருந்தின் மெயின் ஆக்சில் கட் ஆனதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.

விருதுநகரில் கல்லூரி பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்

தீவிர சிகிச்சையில் 6 மாணவிகள்: இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 6 மாணவிகளை மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஸ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: ஆவடியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Last Updated : May 6, 2022, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.