ETV Bharat / state

ஓடைநீரை கடக்க தவிக்கும் மக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை - bridgeless people in Chengulam village

விருதுநகர்: செங்குளம் கிராமத்தில் உள்ள கால்வாயைக் கடக்க பாலம் அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கைவைத்தனர்.

Request to build a bridge in Chengulam village
author img

By

Published : Nov 2, 2019, 9:20 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நீர்ப்பாசன வசதிக்கு பயன்படுத்தும் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதி குடியிருப்புக்கும் மேற்குப் பகுதி குடியிருப்புக்கும் நடுவில் அமைந்துள்ள நீரோடை வழியாகச் செல்கிறது.

செங்குளம் கிராமத்தில் பாலமின்றி தவிக்கும் மக்கள்

அனைத்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீரும் இந்த நீரோடை வழியாகவே செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த ஓடை முழுவதும் குப்பைகளும் புதர்களும் சூழந்து ஆங்காங்கு தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அக்கிராம மக்கள், ஓடையை சரிசெய்து பாலம் அமைக்க வேண்டி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்ற வட்டாட்சியர் பழனிச்சாமி அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அம்மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படியுங்க:

ஜெயம் ரவி-25 வெளியானது 'பூமி'யின் பர்ஸ்ட் லுக்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நீர்ப்பாசன வசதிக்கு பயன்படுத்தும் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதி குடியிருப்புக்கும் மேற்குப் பகுதி குடியிருப்புக்கும் நடுவில் அமைந்துள்ள நீரோடை வழியாகச் செல்கிறது.

செங்குளம் கிராமத்தில் பாலமின்றி தவிக்கும் மக்கள்

அனைத்து குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீரும் இந்த நீரோடை வழியாகவே செல்கிறது. இந்த ஓடை வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த ஓடை முழுவதும் குப்பைகளும் புதர்களும் சூழந்து ஆங்காங்கு தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அக்கிராம மக்கள், ஓடையை சரிசெய்து பாலம் அமைக்க வேண்டி அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்ற வட்டாட்சியர் பழனிச்சாமி அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அம்மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படியுங்க:

ஜெயம் ரவி-25 வெளியானது 'பூமி'யின் பர்ஸ்ட் லுக்!

Intro:விருதுநகர்
01-11-19

கால்வாயில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்றி பாலம் அமைத்து தர கோரி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை

Tn_vnr_01_public_bridge_issue_vis_script_7204885Body:விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் உள்ள கால்வாய் கடக்க பாலம் அமைக்கக்கோறியும், மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்ற கோரி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை

விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் விவசாய நீர்ப்பாசன வசதி பெரும் கண்மாய் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாயில் கழுத்து பகுதியில் உபரிநீர் செல்லும் நீர் வழித்தடம் கிராமத்தின் மையப்பகுதியில் செல்கிறது கிழக்குப் பகுதி குடியிருப்புக்கும் மேற்குப் பகுதி குடியிருப்புக்கும் நடு மையமாக இந்த நீரோடை செல்கிறது இந்த நீரோடையின் வழியாகத்தான் நான்கு புறமும் உள்ள அனைத்து குடியிருப்புகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவு நீர் சாக்கடை வந்து செல்லும் பகுதியாக உள்ளது, மேலும் கிராம பொதுமக்கள் அனைவரும் நடந்துசெல்லும் பகுதியாகும் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் வண்டி போன்ற வாகனங்கள் இதன் வழியாகவே செல்ல வேண்டிய நிலையும் உள்ளது மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் இந்த ஓடையை கடந்தே பள்ளிக்கு செல்லும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் இந்த ஓடை முழுவதும் குப்பைகளும் புதர்களும் சூழப்பட்டு ஆங்காங்கு தண்ணீர் தேங்கி சுகாதார கேட்டினை உருவாகும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மழைகாலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. கிழக்கு ஓரமாக மங்கம்மா சாலை பகுதி முழுவதும் பாதச்சுவடுகள் இல்லாமல் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தெருக்களில் இருந்து வரும் கழிவு நீர் செல்வதற்கு முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாத நிலையில் கழிவு நீரானது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் தேங்கிவிடும் சூழ்நிலை உள்ளது. இந்த ஓடை வழியாகத்தான் மயானத்திற்கு செல்லவேண்டிய பாதை அமைந்துள்ளது இதனை சரிசெய்ய கோரி கிராம பொதுமக்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீட்டு கண்மாயின் உபரி நீர் செல்லும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரி செய்து கிராம மக்கள் சென்று வர உரிய நடைபாதை அமைக்க வேண்டுமெனவும் வாறுகால் வசதியையும் செய்து தரக்கோரி மனு அளித்து கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை வட்டாட்சியர் பழனிச்சாமி செங்குளம் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தப் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.