ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் மின்தடை: கர்ப்பிணிகள் அவதி

author img

By

Published : May 2, 2021, 9:50 AM IST

விருதுநகர்: ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2 மணி நேர மின்தடையால் கர்ப்பிணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

GH
GH

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று (மே 1) மாலை வேளையில் பலத்த காற்று வீசியதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இந்த மின்தடை காரணமாக அரசு மகப்பேறு மருத்துவமனை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இரண்டு மணிநேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாதால் மருத்துவமனையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் மின்சாரத்திற்கு மாற்று வழி எதும் செய்யாமல் அரசு அலுவலர்கள் மெத்தனம் காட்டிவருவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும் எனவும் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று (மே 1) மாலை வேளையில் பலத்த காற்று வீசியதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

இந்த மின்தடை காரணமாக அரசு மகப்பேறு மருத்துவமனை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இரண்டு மணிநேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாதால் மருத்துவமனையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

அரசு மருத்துவமனையில் மின்சாரத்திற்கு மாற்று வழி எதும் செய்யாமல் அரசு அலுவலர்கள் மெத்தனம் காட்டிவருவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும் எனவும் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.