ETV Bharat / state

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

author img

By

Published : Jul 25, 2022, 7:37 PM IST

Updated : Jul 25, 2022, 7:51 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 270-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் 16-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக்கூறி பள்ளி மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அலுவலர்கள், காவல்துறையினர், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்தப்புகாரின் பேரின் போலீசார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆசிரியரைக் கைது செய்து அழைத்து வரும்போது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை தாக்கமுற்பட்டனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் பாதுகாப்புடன் ஆசிரியரை அழைத்துச்சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முதல் குடிமகள் முர்முவின் அதிகாரங்கள் என்னென்ன...?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் சுமார் 270-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் 16-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பணிபுரியும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக்கூறி பள்ளி மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

இதனையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அலுவலர்கள், காவல்துறையினர், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்தப்புகாரின் பேரின் போலீசார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஆசிரியரைக் கைது செய்து அழைத்து வரும்போது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை தாக்கமுற்பட்டனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட போலீசார் பாதுகாப்புடன் ஆசிரியரை அழைத்துச்சென்றனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முதல் குடிமகள் முர்முவின் அதிகாரங்கள் என்னென்ன...?

Last Updated : Jul 25, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.