விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்காபுரம் பகுதியில் காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பற்றி தெரிவிக்கலாம், என்று காவல் துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சதுரகிரி என்பவரும், அவரது மனைவி அக்கினி ஈஸ்வரியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் கஞ்சா வாங்க வருபவர்கள் அனைவரும் கஞ்சா விற்கும் வீடு என நினைத்து பலருடைய வீட்டுக் கதவுகளை தட்டுவதாகவும் தெரிவித்தனர் .
விருதுநகர் அருகே கஞ்சா விற்ற தம்பதியினர்!
விருதுநகர் : கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் மனைவியிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருவரின் மீதும் வழக்குப் பதிவுசெய்து, கணவர் சதுரகிரியை கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மனைவியை தேடிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்காபுரம் பகுதியில் காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பற்றி தெரிவிக்கலாம், என்று காவல் துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தங்கள் பகுதியில் உள்ள சதுரகிரி என்பவரும், அவரது மனைவி அக்கினி ஈஸ்வரியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் கஞ்சா வாங்க வருபவர்கள் அனைவரும் கஞ்சா விற்கும் வீடு என நினைத்து பலருடைய வீட்டுக் கதவுகளை தட்டுவதாகவும் தெரிவித்தனர் .
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இருவரின் மீதும் வழக்குப் பதிவுசெய்து, கணவர் சதுரகிரியை கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மனைவியை தேடிவருகின்றனர்.
01-09-19
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவி கணவன் கைது மனைவி தப்பி ஓட்டம்
Tn_vnr_01_drug_sales_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவி கணவன் கைது மனைவி தப்பி ஓட்டம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வலைவீச்சு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்றது அப்போது பொதுமக்களிடம் உங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் பிரச்சனைகளை காவலரிடம் கூறலாம் என கூறியதை அடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் அவர்கள் செல்போனை தொடர்பு கொண்ட சில பெண்கள் மங்காபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கஞ்சா வாங்குவதற்கு பள்ளி சிறுவர்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் பலருடைய வீட்டு கதவுகளை கட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர் இதைத்தொடர்ந்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மங்காபுரம் பகுதியில் சோதனை செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த சதுரகிரி மற்றும் அவரது மனைவி அக்கினி ஈஸ்வரி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது சதுரகிரியை கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய அவரது மனைவி அக்னி ஈஸ்வரியை தேடிவருகின்றனர் இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சதுரகிரியை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion: