விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் பெண் காவலர் கனிமுத்து. இவர், கணவரை விட்டு பிரிந்து காவலர் குடியிருப்பு அருகேயுள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
மூச்சுத் தினறல் காரணமாக பெண் காவலர் உயிரிழப்பு!
விருதுநகர்: காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்த பெண் காவலர் மூச்சுத் திணரல் காரணமாக உயிரிழந்தார்.
![மூச்சுத் தினறல் காரணமாக பெண் காவலர் உயிரிழப்பு! மூச்சுத் தினறல் காரணமாக பெண் காவலர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:32:32:1619773352-tn-vnr-01-virudhunagar-lady-police-writer-death-script-tn10049mp4-30042021132151-3004f-1619769111-176.jpg?imwidth=3840)
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக இவர் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்.30) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகியதால் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிசிச்சையிலிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படுவதால் அதற்கு மருத்துவம் பார்த்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். இதனால், கரோனா பரிசோதனை எடுக்கவில்லை. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய பெண் காவலர் கனிமுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாக உடன் பணியாற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் பெண் காவலர் கனிமுத்து. இவர், கணவரை விட்டு பிரிந்து காவலர் குடியிருப்பு அருகேயுள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக இவர் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்.30) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகியதால் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிசிச்சையிலிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படுவதால் அதற்கு மருத்துவம் பார்த்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார். இதனால், கரோனா பரிசோதனை எடுக்கவில்லை. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய பெண் காவலர் கனிமுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாக உடன் பணியாற்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.