கரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவிவரும் சூழலில், அதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கு: விருதுநகரில் வெறிச்சோடிய சாலைகள்
விருதுநகர்: கரோனா முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி விருதுநகர் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
![கரோனா ஊரடங்கு: விருதுநகரில் வெறிச்சோடிய சாலைகள் ஊரடங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:54:03:1619331843-tn-vnr-01-korona-lockdown-visual-tn10049-25042021093104-2504f-1619323264-130.jpg?imwidth=3840)
இதனால் விருதுநகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகள்கூட இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.
பால் பூத், மருத்துவமனை மெடிக்கல் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், நகர்ப்பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. அநாவசியமாக வெளியே வருபவர்களைக் கண்காணிக்க ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவிவரும் சூழலில், அதைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஏழு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் விருதுநகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகள்கூட இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.
பால் பூத், மருத்துவமனை மெடிக்கல் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், நகர்ப்பகுதி முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. அநாவசியமாக வெளியே வருபவர்களைக் கண்காணிக்க ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.