ETV Bharat / state

விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரி - கட்டுமானப் பணிகள் தீவிரம் - Construction of Virudhunagar Medical College

விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தீவிரம்
புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தீவிரம்
author img

By

Published : Jan 29, 2020, 6:23 PM IST

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பரிந்துரை செய்தது. தற்போது மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்ததையடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில், அரசு பல் மருத்துவக் கல்லூரி, கூடுதல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதனை ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. மேலும், மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அளவீடு செய்யப்பட்ட இடம் சுத்தப்படுத்தப்பட்டுவருகிறது.

புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தீவிரம்

பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைக்க உள்ளதாகவும் மாவட்ட அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு - அரசு மருத்துவமனைகளில் மத்திய குழு

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பரிந்துரை செய்தது. தற்போது மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்ததையடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில், அரசு பல் மருத்துவக் கல்லூரி, கூடுதல் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதனை ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. மேலும், மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக அளவீடு செய்யப்பட்ட இடம் சுத்தப்படுத்தப்பட்டுவருகிறது.

புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் தீவிரம்

பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைக்க உள்ளதாகவும் மாவட்ட அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு - அரசு மருத்துவமனைகளில் மத்திய குழு

Intro:விருதுநகர்
29-01-2020

மருத்துவக் கல்லூரி கட்டுமானத்திற்காக
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிப்பு

Tn_vnr_01_medical_college_preparation_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்காக விருதுநகரில் பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அரசுக்கு பரிந்துரை செய்தது. அதையடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தொடங்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அதே வளாகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவக் கல்லூரி அமையும் போது விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையிலும் கூடுதல் சிறப்பு சிகிச்சை பிரிவுகளும், கூடுதல் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே உள்ள பெருந்திட்ட வளாக இடம் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டு அதற்கான அளவீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்த பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஜேசிபி மற்றும் பொக்லின் இந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதோடு, கட்டுமானப் பணிகளுக்காக அளவீடு செய்யப்பட்ட இடமும் சுத்தப்படுத்தப்பட்டு மட்டப்படுத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2வது வாரத்தில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.