ETV Bharat / state

மனநலம் பாதித்த சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்: இளைஞர் போக்சோவில் கைது

author img

By

Published : Jan 24, 2020, 8:22 AM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Youth arrested in pocso, போக்சோவில் இளைஞர் கைது
போக்சோவில் இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியை அவரது தாயர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அந்தச் சிறுமி ஆறு மாதம் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின்பேரில் விசாரணை செய்ததில் சிறுமியின் பக்கத்து வீட்டிலிருந்த கிருஷ்ணன் என்பவரது மகன் அருள்ராஜ் (22) என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாகச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த இளைஞர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களைப் பயன்படுத்தி சிறுமியிடம் அடிக்கடி தவறாக நடந்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாடைக்குள் ஜொலித்த தங்கம்: அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமியை அவரது தாயர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அந்தச் சிறுமி ஆறு மாதம் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின்பேரில் விசாரணை செய்ததில் சிறுமியின் பக்கத்து வீட்டிலிருந்த கிருஷ்ணன் என்பவரது மகன் அருள்ராஜ் (22) என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாகச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த இளைஞர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களைப் பயன்படுத்தி சிறுமியிடம் அடிக்கடி தவறாக நடந்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்த காவல் துறையினர் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உள்ளாடைக்குள் ஜொலித்த தங்கம்: அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள்!

Intro:tn_vpm_04_thirukovilur_posco_aquest_arrest_arulraj_pic_tn10026Body:tn_vpm_04_thirukovilur_posco_aquest_arrest_arulraj_pic_tn10026Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.