ETV Bharat / state

மல்யுத்தம் பயிற்சிபெற்ற ஐந்தே மாதங்களில் வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்!

author img

By

Published : Nov 30, 2019, 7:39 PM IST

ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷ், தான் நிச்சயம் இந்தியாவிற்காக தங்கம் வெல்வேன் என நமது ஈடிவி பாரத்திற்கு தெரிவித்துள்ளார்.

Wrestler Suresh
Wrestling

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் - கீதா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த சுரேஷ் (20), தற்போது சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்துவருகிறார். இவரது தந்தை ஈரோடு பக்கம் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாக வேலை பார்த்து வருகிறார். தயார் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மல்யுத்தப் போட்டியில் அசத்திய சுரேஷ்

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர் சேலம் தனியார் கல்லூரியில் படிக்கும்போது தனது ஆசிரியர் ஹரிஹரனின் அறிவுறித்தலின் பெயரில் மல்யுத்தம் பயிற்சிப் பெற்றார். ஐந்தே மாதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்ற அவர், நவம்பர் 21 முதல் 24ஆம் தேதிவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் பேசியதாவது,

"சேலம் தனியார் கல்வியியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு மைக்ரோபயாலஜி படித்து வருகிறேன். அங்கு எனது ஆசிரியர் ஹரிஹரன் மூலமாகதான் இந்த மல்யுத்த போட்டி எனக்கு தெரியும். நான் இந்த அளவிற்கு வளர அவரது அன்பு, அரவனைப்பு முயற்சி இவையெல்லாம் தான் காரணம். மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை வென்று தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில், நான் இரண்டாம் இடம் இடத்தை பிடித்ததால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது.

சுரேஷ்

கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான இடவசதிகள் இல்லை. இதனால், ஈரோடு சென்று ஒரு மாதக்காலம் பயிற்சிபெற்று வந்தது மிகவும் கடினமாக இருந்தது. ஒருபக்கம் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், மறுபக்கம் கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான வசதி இல்லாத சூழலில் வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மல்யுத்ததிற்கு தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துகொடுத்தால் நிச்சயம் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வெல்வேன்" கூறினார்.

மேலும், எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல அழைப்பு வந்தது. ஆனால் அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை என்பதால் அதனை மறுத்து விட்டேன் என மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சுரேஷின் தாய் கீதா கூறுகையில்,

சுரேஷின் தாயார் கீதா

"மல்யுத்தத்தில் பயிற்சி பெற அவன் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரோடு செல்ல 5 மணி நேரம் ஆகும். சொந்த செலவில்தான் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் செலவையும் நாங்கள் செய்துவருகிறோம். அவனிடம் திறமை இருந்தும், பொருளாதார வசதி இல்லை என்பதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துதர வேண்டும். மேலும் எனது மகனவும் அரசாங்கம் நிதியுதவி செய்து தர வேண்டும்" என வலியுறித்தியுனார்.

Suresh Wrestler
வெள்ளிப் பதக்கத்துடன் சுரேஷ்

கள்ளக்கிறிச்சியில் சுரேஷை போன்று மல்யுத்தப் போட்டியில் சாதிக்க துடிக்கும் பலருக்கும், தமிழ்நாடு அரசு பொதுமான இடவசதிகளும், பயிற்சியாளரையும் வழங்கினால் நிச்சயம் அவர்கள் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் - கீதா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்த சுரேஷ் (20), தற்போது சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்துவருகிறார். இவரது தந்தை ஈரோடு பக்கம் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாக வேலை பார்த்து வருகிறார். தயார் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மல்யுத்தப் போட்டியில் அசத்திய சுரேஷ்

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர் சேலம் தனியார் கல்லூரியில் படிக்கும்போது தனது ஆசிரியர் ஹரிஹரனின் அறிவுறித்தலின் பெயரில் மல்யுத்தம் பயிற்சிப் பெற்றார். ஐந்தே மாதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசை வென்ற அவர், நவம்பர் 21 முதல் 24ஆம் தேதிவரை ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் பேசியதாவது,

"சேலம் தனியார் கல்வியியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு மைக்ரோபயாலஜி படித்து வருகிறேன். அங்கு எனது ஆசிரியர் ஹரிஹரன் மூலமாகதான் இந்த மல்யுத்த போட்டி எனக்கு தெரியும். நான் இந்த அளவிற்கு வளர அவரது அன்பு, அரவனைப்பு முயற்சி இவையெல்லாம் தான் காரணம். மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை வென்று தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில், நான் இரண்டாம் இடம் இடத்தை பிடித்ததால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது.

சுரேஷ்

கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான இடவசதிகள் இல்லை. இதனால், ஈரோடு சென்று ஒரு மாதக்காலம் பயிற்சிபெற்று வந்தது மிகவும் கடினமாக இருந்தது. ஒருபக்கம் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், மறுபக்கம் கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற பொதுமான வசதி இல்லாத சூழலில் வெள்ளி வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மல்யுத்ததிற்கு தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துகொடுத்தால் நிச்சயம் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வெல்வேன்" கூறினார்.

மேலும், எனக்கு வெளிநாட்டிற்கு செல்ல அழைப்பு வந்தது. ஆனால் அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை என்பதால் அதனை மறுத்து விட்டேன் என மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சுரேஷின் தாய் கீதா கூறுகையில்,

சுரேஷின் தாயார் கீதா

"மல்யுத்தத்தில் பயிற்சி பெற அவன் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரோடு செல்ல 5 மணி நேரம் ஆகும். சொந்த செலவில்தான் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கும் செலவையும் நாங்கள் செய்துவருகிறோம். அவனிடம் திறமை இருந்தும், பொருளாதார வசதி இல்லை என்பதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, கள்ளக்குறிச்சியில் மல்யுத்தம் பயிற்சிபெற தமிழ்நாடு அரசு பொதுமான வசதிகளை செய்துதர வேண்டும். மேலும் எனது மகனவும் அரசாங்கம் நிதியுதவி செய்து தர வேண்டும்" என வலியுறித்தியுனார்.

Suresh Wrestler
வெள்ளிப் பதக்கத்துடன் சுரேஷ்

கள்ளக்கிறிச்சியில் சுரேஷை போன்று மல்யுத்தப் போட்டியில் சாதிக்க துடிக்கும் பலருக்கும், தமிழ்நாடு அரசு பொதுமான இடவசதிகளும், பயிற்சியாளரையும் வழங்கினால் நிச்சயம் அவர்கள் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பர்.

Intro:tn_vpm_02_wristeling_national_second_prize_winner_vis_tn10026.mp4Body:tn_vpm_02_wristeling_national_second_prize_winner_vis_tn10026.mp4Conclusion:ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் கள்ளக்குறிச்சி சேர்ந்த சுரேஷ் மல்யுத்த போட்டியில் கலந்த கொண்டு இரண்டாம் பரிசு வெள்ளிப் பதக்கத்தை வென்ற சுரேஷ் தமிழக அரசு உதவி செய்தால் மல்யுத்த போட்டியில் தமிழ்நாட்டிற்கு அல்ல இந்தியாவிற்கு தங்கம் வென்று பெருமை சேர்ப்பேன், ஈடிவி பார்த்க்கு பிரத்தியேக பேட்டி !!

கள்ளகுறிச்சி மாவட்டம் எம் ஜி ஆர் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் கீதா தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தவர் தான் சுரேஷ் வயது 20 இவர் தற்போது சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மைக்ரோபயாலஜி படித்து வருகிறார் இவர் மிகவும் நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவர் இவரது அப்பா ஈரோடு பக்கம் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாக வேலை பார்த்து வருகிறார் அம்மாவும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இரவு நேர ஸ்டெடி கால் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மிகவும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த சுரேஷ் சேலம் தனியார் கல்லூரியில் படிக்கும்போது தனது ஆசிரியர் அதாவது மாதா பிதா குரு என்று சொல்வார்கள் அதேபோல தனது வாழ்க்கைக்கு பிதா எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆம் சுரேஷ் தம் ஆசிரியர் ஹரிகரன் என்பவர் ஆலோசனைப்படி அவரின் அறிவுரைப்படி தனது திறமையை தமிழ்நாட்டிற்கு வெளிப்படுத்து இருக்கிறார். சுரேஷ் சொல்லும் போது தனது ஆசிரியர் ஹரிஹரன் சார் மூலமாகவே இது சாத்தியம் என்கிறார் அவர் சொல்லித்தான் அதற்கான விளக்கத்தையும் பயிற்சியும் முழுவதும் எனக்கு கொடுத்துதான் பேரிலேயே தான் முழுமனதாக அளவு நெகிழ்ச்சியுடனும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன் என்று நமது ஈடிவி பாரத்க்கு மனம் திறக்கிறார் சுரேஷ் எங்கப்பா அம்மாவுக்கு நாங்கள் மொத்தம் 2 பேர் நான் அண்ணன் எனது தம்பி விக்னேஷ் நான் சின்ன வயது முதலே அரசு பள்ளியில் தான் படித்தேன் எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம்தான் பள்ளிப் படிப்பை முடித்த நான் சேலம் தனியார் கல்வியியல் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு மைக்ரோபயாலஜி படித்து வருகிறேன் அங்கு எனது ஆசிரியர் ஹரிஹரன் சாரால் தான் இந்த மல்யுத்த போட்டி எனக்கு தெரியும், அவரின் அன்பும்,அரவணைப்பும் அவரின் விடா முயற்சியும் என்னை இவ்ளோ பெரிய வெற்றிக்கு வழிக்கு வகுத்து இருக்கிறது. அவரின் பயிற்சியும்,முயர்ச்சியும் நான் முதன் முதலில் மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டியில் பங்கேற்றேன் அதுளில் நான் முதல் பரிசை பெற்றேன்.பின்பு அதனை தொடர்ந்து தமிழ்நாடு அளவிலான நாமக்கல் அருகே உள்ள குமார பாளையத்தில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு பெற்று முதல் பரிசை பெற்றேன்.பின்பு அதனை தொடந்து நவம்பர் மாதம் 21 முதல் 24ந் தேதி வரை ஹைதரபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நடைபெறும் போட்டிக்கு ஒரு மாதம் கள்ளக்குறிச்சி யிலிருந்து ஈரோடு வரை சென்று பயிற்சி எடுத்தேன்,அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தாகவும் கூறினார்.மேலும் அதனை தொடர்ந்து தேசிய அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் தமிநாட்டைச் சேர்ந்த நாங்கள் 14 பேர் கலந்த கொண்டோம் அதில் நான் 2 சுற்றில் முதலிலும்,மூன்றாவது சுற்றில் 2 வது இடத்தில் வந்ததால் தங்கம் வெல்ல முடியாமல் வெள்ளி பதக்கத்தை இரண்டாவது பரிசாக வென்றேன்.ஒரு பக்கம் எனக்கு வருத்தமளித்தாலும்,ரொம்ப பெருமையாக இருந்த என்கிறார், ஏன் என்று கேட்டால் எங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மல்யுத்த போட்டிக்கு மைதானமும்,பயிற்சியாளரும் இருந்து ஊக்குவித்தல் தமிழ்நாட்டிற்க்கே இல்லே இந்தியவிற்கே தங்கம் வென்று பெருமை சேர்ப்பேன் என்கிறார். மேலும் எனக்கு வெளிநாடு இத்தாலி நாட்டிற்கு செல்ல அழைப்பு வந்தது எனவும் அதற்கு பொருளாதார வசையும் விசா வசதியும் எனது குடும்பத்திற்கு இல்லை என்றதால் அதனை மறுத்து விட்டேன் என்பதையும் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்தார் சுரேஷ். மேலும் சுரேஷின் தாய் எனது பையன் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துவிடலாம் அவ்வளவு செலவு எல்லாம் எங்கள் குடும்பத்தில் மிகவும் பார்த்து பார்த்து பண்ணினோம் அவன் இங்க இருந்து ஈரோட்டுக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும் அவனுக்கு எல்லாம் எங்களுடைய செலவு தான் எங்களால் திறமை இருந்தும் பொருளாதார வசதி இல்லை என்பதால் மிகவும் கஷ்டப்படுகிறோம் தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும் இதுபோல மறித்து வீரர்களையும் ஊக்குவித்தால் மேலும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிற்கே எனது மகன் பெருமை சேர்ப்பார் என உறுதிபட தெரிவித்தார், கீதா அவர்கள் எனது மகன் மட்டும் அல்ல கள்ளக்குறிச்சியில் எல்லா குழைந்தகளும்,திறமையோடு இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மல்யுத்த போட்டிக்கான பயிற்சியாளரும் மைதானமும் இருந்தால் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இன்னும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என கூறினார்,மேலும் இது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தனது பையனுக்கு உதவ வேண்டுமென்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் இதுபோல இளைஞர்களை தமிழக அரசு கையில் எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சியும் பயிற்சியாளரை வழங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பேட்டி: 1 சுரேஷ் (மல்யுத்த வீரர்)

பேட்டி :2 சுரேஷ் தாய் கீதா
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.