ETV Bharat / state

நெடுஞ்சாலைப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டதா? உயர்நீதி மன்றம் - highway project case

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையேயான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vilipuram nagai highway project case
author img

By

Published : Sep 20, 2019, 6:47 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மூன்றுகட்ட பணிகள் முடிவடைந்து நான்காம்கட்ட பணிகளுக்காக சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல், ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாகவும், விவசாய மற்றும் வனப்பகுதிகளின் வழியாக அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்கவேண்டுமெனவும் பண்டாரிநாதன், டிராபிக் ராமசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பண்டாரிநாதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு 63% விவசாய மற்றும் வனப்பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம்கட்ட தேசிய நெடுஞ்சாலை விவரிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற வாதங்களை முன்வைத்து சாலை விவரிப்பு, நில ஆக்கிரமிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா? என மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 180 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி, மூன்றுகட்ட பணிகள் முடிவடைந்து நான்காம்கட்ட பணிகளுக்காக சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல், ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாகவும், விவசாய மற்றும் வனப்பகுதிகளின் வழியாக அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்கவேண்டுமெனவும் பண்டாரிநாதன், டிராபிக் ராமசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பண்டாரிநாதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு 63% விவசாய மற்றும் வனப்பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம்கட்ட தேசிய நெடுஞ்சாலை விவரிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற வாதங்களை முன்வைத்து சாலை விவரிப்பு, நில ஆக்கிரமிப்பு பணிகளுக்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா? என மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Intro:Body:விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டதா? என மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டு விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 180 கி.மீ தூரத்துக்கு 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, மூன்று கட்ட பணிகள் முடிந்து 4ம் கட்டமாக
சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல், 5000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி விவசாய மற்றும் வனப்பகுதி வழியாக அமைக்கப்பட உள்ள சாலை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென பண்டாரிநாதன் மற்றும் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பண்டாரிநாதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு 63% விவசாய மற்றும் வனப்பகுதி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

3ம் கட்ட தேசிய நெடுஞ்சாலை விஸ்தரிப்பு பணிக்காக குறையாக சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறப்படவில்லை. வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைக்கப்பட உள்ளது. சரியான விதிமுறைகளின் படி செயல்படுத்தினால் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதிகளை அதிகப்படுத்த வேண்டியது கட்டாயம். திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நமக்கு மெட்ரோ போன்ற திட்டங்கள் கிடைத்திருக்காது. சில திட்டங்களை நாட்டின் வளர்ச்சிக்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டநாதபுரம்- நாகப்பட்டினம் சாலை அமைக்கும் திட்டம் 2015-16 ம் ஆண்டில் இறுதி செய்யப்பட்டு 400 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

மனுதாரர் குறிப்பிடுவது போல சாலை திட்டத்திற்காக எந்த வனப்பகுதியும் ஆக்கிரமிக்கப்படவில்லை. சாலை அமைக்க அரசு நிலம் 288.89 ஹெக்டேரும், 18.78 ஹெக்டேர் நிலமும் தனியாரிடம், 573.1 ஹெக்டேர் தரிசுநிலம் பயன்படுத்தபடுகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து, சாலை விஸ்தரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்ய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டதா? என மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.