ETV Bharat / state

உதவித்தொகை அறிவிப்பு - வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Jan 22, 2020, 9:04 AM IST

விழுப்புரம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.

விழுப்புரம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் ஆகியோரிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு (தேர்சி பெறாதவர்களும் இதில் அடங்குவர்) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வந்தால் 31.01.2020 தேதிப்படி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெறாதவர்கள்) 200 ரூபாய், பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெற்றோருக்கு) 300 ரூபாய், மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கு 400 ரூபாய், பட்டப்படிப்புக்கு 600 ரூபாய் என்று வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2020 பிப்ரவரி 28ஆம் தேதி வரை, அனைத்து அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து, விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் ஆகியோரிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

குறிப்பாக, பத்தாம் வகுப்பு (தேர்சி பெறாதவர்களும் இதில் அடங்குவர்) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வந்தால் 31.01.2020 தேதிப்படி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெறாதவர்கள்) 200 ரூபாய், பத்தாம் வகுப்பு (தேர்ச்சி பெற்றோருக்கு) 300 ரூபாய், மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கு 400 ரூபாய், பட்டப்படிப்புக்கு 600 ரூபாய் என்று வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2020 பிப்ரவரி 28ஆம் தேதி வரை, அனைத்து அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து, விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் தாய் பால் வங்கி தொடக்கம்..!

Intro:விழுப்புரம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


Body:இதுத்தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.,

"விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் ஜனவரி 1ம் தேதி தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 31.01.2020 அன்றைய நிலையில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.3.2020 அன்றைய தேதியில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூபாய் 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூபாய் 300, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ. 400 மற்றும் பட்டப்படிப்புக்கு ரூ.600 என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்க தகுதிமற்றவர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெருபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


Conclusion:01.01.2020 உடன் தொடங்கும் காலாண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2020 பிப்ரவரி 28ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.