விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், விழுப்புரத்திலிருந்து வளவனூர் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக சாலை விரிவாக்கப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சாலைப் பணிகள், கட்டுமான பணிகளுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் அரசு மீண்டும் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மகாராஜாபுரம் பகுதியில் இருந்த, 1952ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமைவாய்ந்த புத்து மாரியம்மன் கோயில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, இன்று அதிகாலை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அப்பகுதி பக்தர்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க : கொண்டாட்டங்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது- விழுப்புரம் எஸ்பி